Wednesday, 28 January 2015

கவிதைகள்

#கவிதை எழுதினேன் 
காதலோ என்றார்கள்
உண்மையே   
மறுக்க மனமில்லை 
மனப்பூர்வமாக காதலிக்கிரேன் 
உயிரையும் மெய்யையும் இணைத்த 
என் தமிழ் மொழியை...

#சேமித்த பணத்தின் மதிப்பும் 
சேகரித்த காதலின் ஆழமும் 
சேருமிடம் சேர்ந்தால் 
செலவாகினாலும் சுகமே...

#என் இதய துடிப்பையும் தாண்டி 
என் கண் இமை துடிக்கும் சத்தத்தை 
நான் கேட்டேன் காரணம் உன் கண்கள்..

#நீண்ட பாதையில் நீண்ட தூரம் 
நாம் கை கோர்த்து  சென்று கொண்டிருக்கிறோம்
நீண்ட தூரம் சென்ற பிறகு தான் 
என் நினைவிற்கு வந்தது 
இது என் நீண்ட நாள் கனவு என்று..

#சத்தம் கேட்டு எழுந்தேன் 
ஒரு வாசணை ஒன்று நுகர்ந்தேன்
பச்சை மரங்கள் சிரித்தவுடன்
மனம் பிச்சை கேக்க ஏங்குதடி 
உன் சிரிப்பில் மயங்கிய என் மனதை  
மழையே உன் வசப்படுத்தி செல்லாதே...

Best video tutorial for job seekers

https://www.thenewboston.com/videos.php

My pencil sketches during college days